தினம் தினம் திருநாளே... இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எண்ணிய செயல்களில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்:

நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை ஏற்படும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலை தொடர்பான செய்திகள் கிடைக்கும். நிறைவான நாள்.

கடகம்:

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்:

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.

கன்னி:

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயம் உண்டாகும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையும், ஒருவிதமான உடல் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொறுமையினால் மேன்மை உண்டாகும் நாள்.

துலாம்:

கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். உயர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு:

கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பிள்ளைகளின் வழியில் சில மன சங்கடங்கள் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் வருகை மன நிறைவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.

கும்பம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். குடும்பத்தில் பழைய நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் பலதரப்பட்ட எண்ணங்களுக்கு தீர்வு கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழப்பம் நீங்கும் நாள்.

மீனம்:

பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 jan rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->