இன்று சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் - இன்றைய ராசிபலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், தெளிவின்மையும் உண்டாகும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.

ரிஷபம்:

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மேன்மை பொருந்திய நாள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்:

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். போட்டிகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கன்னி:

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

துலாம்:

வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. சோர்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்பமான நாள்.

தனுசு:

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்:

எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் சோர்வு நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். அசதியான நாள்.

கும்பம்:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

மீனம்:

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04 dec rasipalan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->