இன்றைய (01-05-2022) ராசி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தனவரவு சாதகமாக இருந்தாலும் அதற்கு உண்டான விரயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

நெருக்கமானவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.

மிதுனம்

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும், தெளிவும் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

கடகம்

எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

சிம்மம்

செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். அமைதி வேண்டிய நாள்.

கன்னி

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்

மனதளவில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். கனிவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். மறதி குறையும் நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களை விற்பதில் லாபம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆதரவு மேம்படும் நாள்.

மகரம்

மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் ஏற்படும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஒற்றுமை மேம்படும் நாள்.

கும்பம்

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தனவரவு தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சலனம் நிறைந்த நாள்.

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மையும், சோர்வும் உண்டாகும். புதிய நபர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் புதிய அனுபவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

01.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->