முதல்வர் முக ஸ்டாலினை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட முக்கிய புள்ளி அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைதள பக்கத்தில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பதிவிட்ட அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதிமுக மீதான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.

இதனை கண்டித்து நேற்று அதிமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் திமுக மீது அவதூறு பரப்பியதாக அதிமுக பிரமுகர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்துள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர் அதிமுகவின் ஒன்றிய விவசாய அணி செயலாளராக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைதள பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வரும் தென்னரசு, அவ்வப்போது அரசியல் சம்பந்தமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பாக பல்வேறு கருத்துகளை பதிவிட்ட தென்னரசு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமான வகையிலும் பதிவுகள் விட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், திமுக குறித்தும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்தும் ஆபாசமாக பதிவிட்டு வந்ததாக சைபர்கிரைம் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம், திருச்சுழி காவல் நிலைய போலீசார் தென்னரசு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN police arrest nochipalayam admk member


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->