மருது பாண்டியர்களை இடது கையில் டீல் செய்த சீமான்.! அதிர்ந்து போன தம்பிகள்.!
seeman raise his left hand
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியினரை அழைத்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை, அவரின் தம்பிகள், நிர்வாகிகள் மற்றும் சீமான் ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெற்ற மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வில் பங்கேற்று வீரமுழக்கம் இட்டனர்.
அப்போது தலைவர் சீமானின் வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. எனவே அவர் தனது இடதுகையை தூக்கி முழக்கமிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, சீமான் அண்ணனுக்கு என்ன தான் ஆச்சு? வலது கையில் ஏன் கட்டு போடப்பட்டுள்ளது. வீரவணக்கம் செலுத்தும்போது அன்னான் இடது கையை தூக்கி முழக்கம் இடுகிறார் என்று சீமானின் தம்பிகள் பதறுகிறார்கள்.
English Summary
seeman raise his left hand