விடுதலையை விரும்பாத சின்னம்மா.! உள்குத்துடன் எடுத்த முடிவால், தொண்டர்கள் சோகம்.!
sasikala dont want to release soon
அமமுக பொதுச் செயலாளராக இருந்த சின்னம்மா சசிகலா விடுதலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தண்டனை பெற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா அடுத்தாண்டு வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சசிகலாவின் விடுதலைக்குப் பின்பு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று தீவிர எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்று கூறப்பட்டது. இந்த செய்தியானது வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 15க்கு முன்னதாக சசிகலா வெளியாவதை தானே விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கு கொரோனா ஒரு காரணமாக இருந்தாலும் கூட சசிகலாவின் விடுதலையானது மிக பிரம்மாண்டமாக தொண்டர் படை சூழ இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க பட்டிருக்கும் நிலையில், பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு என்பது சாத்தியமானது இல்லை.
எனவே சசிகலா ஜோதிடரின் கணிப்பு படி செப்டம்பர் மாதம் தான் ரிலீஸாவார் என்று கூறப்படுகிறது. மேலும், அப்போது அவர் ரிலீஸ் ஆனால் தான் அவருடைய அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடுத்த மாதம் வெளியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சசிகலா வெளியாவார் என்று எதிர்பார்த்த அமமுக தொண்டர்கள் இந்த அறிவிப்பால் சோர்ந்து விட்டனர்.
English Summary
sasikala dont want to release soon