ஜாலியாக இருக்க மறுத்ததால் மனைவியை காலி செய்த முதியவர்.! திருப்பூரில் கொடூரம்.!
Women murdered by husband in tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் கணேசன் என்ற 58 வயது நபர், ஈஸ்வரி என்ற தனது 54 வயது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இருபத்தி ஒன்பது வயது மகன் இருக்கின்றார். அத்துடன் ஈஸ்வரியின் தாய் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
கணவன் மனைவி இருவரும் நெசவுத் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு உறங்கச் சென்றனர். நிறைய வேலை காரணமாக ஈஸ்வரி அயர்ந்து தூங்கியுள்ளார்.
அப்போது கணேசன் எழுந்து நள்ளிரவு நேரத்தில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், மனைவி சம்மதிக்காமல் இருந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் அருகில் இருந்த கல்லை தூக்கி ஈஸ்வரியின் தலையில் போட்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலையை மறைக்க அவர் மனைவியின் உடலை அமராவதி ஆற்றில் வீச முடிவு எடுத்து தார்பாய் போட்டு மனைவியின் உடலை கட்டியுள்ளார். அதற்குள் நேரமாகி விடிய துவங்கி விட்டதால் அவரால் உடலை எடுத்து செல்ல முடியவில்லை.
காலையில் எழுந்து ஈஸ்வரியின் தாய் பார்த்துவிட்டு மகள் கொலையாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Women murdered by husband in tiruppur