கோவையில் கள்ளக்காதலைத் தட்டிக்கேட்ட மனைவி; கணவரின் மர்ம உறுப்பை அறுத்து வீசிய பெண்!
kovai illegal affair wife attack husband
கோவை கணபதி பகுதியில் வசித்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு, ரத்தக் களரியான கொடூரச் சம்பவத்தில் முடிந்துள்ளது.
விபரீதத்திற்குப் பின்னணி:
அஸ்ஸாமைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா (33), கோவையில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜிந்தி. பிதானுக்குப் பல வடமாநிலப் பெண்களுடன் தொடர்பு இருந்ததும், அவர் அடிக்கடி அவர்களுடன் வீடியோ காலில் பேசி வந்ததும் தம்பதி இடையே அடிக்கடி மோதலை ஏற்படுத்தியது. மனைவியின் எச்சரிக்கையையும் மீறி பிதான் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்துள்ளார்.
கையும் களவுமாகப் பிடிபட்ட கணவன்:
சம்பவத்தன்று ஜிந்தி வெளியே சென்றிருந்த நேரத்தில், பிதான் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்குத் திரும்பிய ஜிந்தி இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிதான் தனது மனைவியை அஸ்ஸாமிற்கே திரும்பிச் செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளார்.
நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்:
கணவருக்குத் தக்க பாடம் புகட்ட முடிவெடுத்த ஜிந்தி, பிதான் மதுபோதையில் தூங்கும் வரை காத்திருந்தார். நள்ளிரவில் சமையலறை கத்தியை எடுத்து வந்த அவர், பிதானின் மர்ம உறுப்பை அறுத்து வீசினார். பின்னர் கணவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டுத் தப்பியோடினார்.
கைது மற்றும் சிகிச்சை:
வலி தாங்க முடியாமல் பிதான் போட்ட அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ஜிந்தியைக் கைது செய்துள்ளனர்.
English Summary
kovai illegal affair wife attack husband