சண்டையிட்ட மனைவி, சமாதானம் செய்ய 3 நாள் விடுமுறை கேட்ட ஊழியர்.!
employee asked for 3 days leave to make peace wife
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது அதிகாரிக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தில், "தனது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் எனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது எனது மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர கிராமத்திற்கு செல்ல இருக்கிறேன். இதனால் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை எனக்கு விடுப்பு அளிக்க வேண்டும்". என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் அரசு ஊழியரின் இந்த விடுப்பு விண்ணப்ப கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.
English Summary
employee asked for 3 days leave to make peace wife