ஓ ஓஹ்! விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்...! - இபிஎஸ் - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவராக இருப்பவர் ஆனந்தகுமார் என்பவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"அன்பு அண்ணன், மக்கள் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில்,ஆனந்தகுமாரை கட்சியிலிருந்து நீக்கி 'எடப்பாடி பழனிசாமி' உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி:

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது,"கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth wing leader Anandakumar who wished Vijay on his birthday has been removed from partys basic membership EPS


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->