பாகுபாடுகள் எதற்கு? பொதுமக்களுக்கு ஒரு வீதி, உள்துறை அமைச்சருக்கு ஒரு விதியா?- எம்.பி மாணிக்கம் தாகூர்
Why discrimination One rule for public one rule for Home Minister MP Manickam Thakur
தமிழக மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் 'அமித்ஷா', கடந்த 8-ந்தேதி அதாவது நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதில் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட புகைப்படக்காட்சிகள் வெளியிடப்பட்டது.இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
எம்.பி. மாணிக்கம் தாகூர்:
அதில் குறிப்பிட்டதாவது,"நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? "என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Why discrimination One rule for public one rule for Home Minister MP Manickam Thakur