2026 சட்டமன்ற தேர்தல்: 02-வது முறையாக பதவியில் அமரபோகும் முதல்வர்: வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்: பி.கே.சேகர்பாபு பேச்சு..!
We will promise to give victory as a gift to the Chief Minister in the Assembly Elections says Minister Sekarbabu
கலைஞரின் பிறந்த நாள் மற்றும் செம்மொழி நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓட்டேரி, மங்களபுரம், சந்திரயோகி சமாதி சாலையில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது: மக்களின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் இருக்கும் ஒரே இடம் திமுக நடத்தும் கூட்டங்கள் தான். வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 02-வது முறையாக பதவியில் அமரவிருக்கும் முதல்வருக்கு, சென்னை கிழக்கு மாவட்டத்தின் 06 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை பரிசாக அளிப்போம் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், மற்ற தொகுதிகளைவிட சென்னை கிழக்கு மாவட்டத்தின் 06 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளை பெற்று, முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க நாம் அனைவரும் சூளுரைப்போம்’ என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், நாம் எப்போதோ தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். நமது முதல்வர் 02-வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு அதிகப்படியான வாக்குகளை யார் பெற்றுத் தரப்போகிறார்கள் என்பதில்தான் எங்களுக்குள் போட்டி நிலவுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பணிக்கு வந்து செல்லக்கூடியது திமுக இயக்கம் அல்ல. அது, எப்போதும் மக்களுக்காக முன்நிற்கக்கூடிய இயக்கம் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை என்று குறிப்பிட்டார்.
அத்துடன், திமுகவை பொறுத்தவரை போட்டி போட்டு கட்சியை வளர்ப்பதற்கும் மக்களுக்கு முதலில் செய்திகளை கொண்டு சேர்ப்பதில்தான் எங்களுக்குள் போட்டி இருக்கும் என்று பேசியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
We will promise to give victory as a gift to the Chief Minister in the Assembly Elections says Minister Sekarbabu