எச்சரிக்கை! லாக்கப் மரணமா! கடமை தவறினால் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்...! - முதலமைச்சர்
Warning Lockup death If you fail to comply government will take very very strict action Chief Minister
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை காவலாளி அஜித் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்" என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் பல விதமான கருத்துக்களை பரிமாறி வருகிறது.
English Summary
Warning Lockup death If you fail to comply government will take very very strict action Chief Minister