25 பேரின் உயிரை பறித்த தெலுங்கானா பேருந்து விபத்து: பிரதமர் மோடி இரங்கல்! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிரியாலகுடா அருகே இன்று அதிகாலை நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. மோதலின் தாக்கத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே பலர் பலியாகியதோடு, பலர் படுகாயமடைந்தனர். இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சிலர் சிக்கியிருந்தவர்களை வெட்டி எடுத்து வெளியேற்றும் பணியும் நடைபெற்றது.

இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், “தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana bus accident PM Modi condolence


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->