உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.. விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவ  மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு, அமைதியோடு, நிம்மதியோடு, மகிழ்ச்சியாக வாழ தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள், கிறிஸ்துமஸ் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  ஜாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்ககூடாது. பகைவரிடத்திலும் அன்பு காட்டவேண்டும், அன்பும், அறமும்தான்  மனிதநேயத்திற்கு அடிப்படையாகும். இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான்.

 உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாடும், அதே நேரத்தில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் வரிசையில், புதிய வைரஸான டெல் மைக்ரான் தொற்று வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்க, பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth wish for christmas 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->