வெற்றி நமதே! முதலமைச்சருடன் இணக்கமாக இருக்கும் தோழமை கட்சியினர்...! - கே. என் நேரு
Victory ours comrades who harmony with chief Minister K N Nehru
திருவாரூர் தி.மு.க. பிஎல் 2 பாக நிலை முகவர்கள் கூட்டம் மற்றும் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

கே.என்.நேரு:
இந்தக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது,"வருகிற 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை தருகிறார். 9 மற்றும் 10-ம் தேதி திருவாரூருக்கு வருகை தந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
கூட்டணி கட்சியினர் ஏதாவது பிரச்சனை என்றால் முதலமைச்சரிடம் தெரிவிப்பார்கள். உடனடியாக அதனை முதலமைச்சர் சரி செய்து வைப்பார்.கட்சி தலைமையை பொறுத்தவரை ஆங்காங்கே கட்சியில் இருப்பவர்கள் அங்குள்ள பிரச்சனைகளை தெரிவிப்பார்கள்.
அதனை முதலமைச்சர் உடனடியாக சரி செய்து வைப்பார். தோழமை கட்சியினர் முதலமைச்சர் உடன் இணக்கமான முறையில் உள்ளனர்.சிவகங்கை காவலாளி மரணம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.
English Summary
Victory ours comrades who harmony with chief Minister K N Nehru