பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பீகார் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜகதீப் தன்கர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முதல் ஆதரவாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலை தொடர்ந்து, குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.

அதன்படி, மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ஜகதீப் தன்கருக்கு ஆதரவளிப்பதாக முதல் ஆளாக அறிவித்தார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

அவருக்கு ஐக்கிய ஜனதா தளம் அவருக்கு ஆதரவளிக்கும். வாழ்த்துகள்” என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vice presidential election Bihar Chief Minister Nitish Kumar support BJP candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->