தமிழகத்தில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்.! கத்திமுனையில் அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் 22 வயது இளம் பெண் ஒருவரை, 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது வேலூர் மாவட்டத்தில் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் : கடந்த 16ம் தேதி இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் திரையரங்கிற்கு சென்று விட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு ஆட்டோவில் திரும்பியுள்ளார். 

அப்போது அந்த ஆட்டோவில் ஏறி நான்கு பேர், அந்த இளம் பெண்ணையும், அவரின் ஆண் நண்பரையும் கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அந்த இளம்பெண்ணை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

மேலும் அந்த இளம் பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை பறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், ஏடிஎம் மையத்திற்கு சென்று 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து  பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து செல்போன், பணம், அவர்கள் பயன்படுத்திய ஆட்டோ உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vellore young lady abused march


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->