வீபூதி அடுத்த விஜய்! மொத்தமாக ஏமாந்த வேலுமணி? 25 பேரும் எடப்பாடியிடம் நெருங்குகிறார்களா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் லீமா ரோஸ் தொடர்பான புதிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்துள்ள சமீபத்திய பேட்டி தற்போது அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:“அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகத்தான் இப்போது வேலுமணியின் நிலை இருக்கிறது. விஜய்க்கு ஆதரவு தரும் முடிவில் எடப்பாடி பழனிசாமியுடன் வேலுமணி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “லீமா ரோஸிடம் இருந்து பெரிய தொகை பெறப்பட்டதாகவும், அதில் சுமார் 300 கோடி ரூபாய் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், கட்சியை உடைக்கும் முயற்சிகளும் நடந்ததாகவும் தகவல்கள் உள்ளன” என கூறியுள்ளார்.

ஆனால், கட்சியின் நிர்வாக அதிகாரங்கள் இன்னும் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், வேலுமணி தரப்பால் நினைத்தபடி செயல்பட முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய் ஆரம்பத்தில் வேலுமணிக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருந்தார். தற்போது 25 எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக வேலுமணி தரப்பு கூறினாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற சூழ்நிலைகளில் அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதனால் அந்த எம்எல்ஏக்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்த எம்எல்ஏக்களை விஜய் நேரடியாக சந்தித்தது அவருக்கே சட்ட ரீதியான சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கைப் போல இது சிபிஐ விசாரணைக்கு சென்றால் பெரிய பிரச்சினையாக மாறலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, “இந்த சூழலில் வேலுமணி தரப்பை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று ஆளுநர் தரப்பே மறைமுகமாக தெரிவித்துவிட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.பேட்டியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு தகவல் லீமா ரோஸ் குறித்து இருந்தது.

“பலரின் பொறுப்புகளை பறித்த எடப்பாடி பழனிசாமியால், லீமா ரோஸின் பதவியை மட்டும் நீக்க முடியவில்லை. காரணம், பத்து தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளை அவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரிடம் வாங்கியதாக சொல்லப்படும் சுமார் 500 கோடி ரூபாய் விவகாரமும் அதற்கு பின்னணியாக இருக்கலாம்” என தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த விவகாரம் உண்மையாக இருந்தால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் சர்ச்சையாக மாறக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கட்சித் தாவல் சட்டம், பண பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள், சிபிஐ விசாரணை வாய்ப்பு, கூட்டணி அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி என பல அடுக்குகளுடன் அதிமுக அரசியல் தற்போது மிக சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில், அமைச்சரவை வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள வேலுமணி தரப்பு அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

“இறுதியில் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே திரும்பி வருவார்களா?” என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veephoothi ​​is the next Vijay A total disappointment to Velumani Are all 25 people getting close to Edappadi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->