வயநாடு நிலச்சரிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal



வயநாடு நிலச்சரிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ. 15 லட்சம் நிவாரணமாக அளிக்கப் படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் முழுவதுமாக மண்ணில் புதையுண்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், "வயநாட்டில் நடந்துள்ள மாபெரும் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளனர். உயிரோடு மண்ணில் புதைந்த பலரின் உடல்களும் இன்னும் மீட்கப் பட்டு வருகின்றன. மேலும் பலர் உயிருடனும் மீட்கப் பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 

மேலும் வயநாடு பேரிடரை எதிர்கொண்டு வரும் கேரள மாநில அரசின் நிவாரணப் பணிகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ. 15 லட்சம் நிவாரண நிதியாக அளிக்கப் படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே பல்வேறு கட்சியினரும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் மத்திய அரசு இன்னும் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Announced Rs 15 Lakh Relief for Wayanad Landslide


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->