அதிமுகவின் முக்கிய புள்ளிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால், அடுத்த பொது செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தான் என அவரது ஆதரவாளர்களும், பதிலுக்கு ஓ பன்னீர்செல்வம் தான் என அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை  பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நந்தன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வத்தலகுண்டு பகுதியில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, நந்தம் விஸ்வநாதன், உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறிய போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், புரட்சித்தலைவி அம்மா கைகாட்டிய ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வத்தலகுண்டு மக்கள் உள்ளதாக உள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி, நந்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, சி.வி சண்முகம், ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vattalagundu ops supporters poster


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->