வேன் ரெயில் விபத்து : அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்...! -ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
Van train accident Shocked and saddened Chief Minister announces Rs5 lakh compensation
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், 2 இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 5 லட்சம் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.இந்த விபத்து தகவல் தற்போது இணையத்தை உருக்குலைத்து வருகிறது.
English Summary
Van train accident Shocked and saddened Chief Minister announces Rs5 lakh compensation