'வடமொழியை விட மூத்த மொழி தமிழ் மொழி: கமல் பேசியதில் தவறில்லை; அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது': வைகோ எச்சரிக்கை..!
Vaiko warns that there is nothing wrong with Kamals speech it would be better for them to stop with this
வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி. கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது. என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் வைத்துசெய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், “ஜூன் 22 ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு நடத்தவுள்ளது. அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்கல் குறித்து பொதுக்குழுவில் எடுத்து வைக்க வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெங்களூரில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது என்றும், முன்கூட்டியே விபரீத மரணங்கள் நிகழக்கூடும் என உளவு துறை யூகித்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் என்வும், மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் அங்கு செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், உலகில் இருக்கும் மொழியில் வல்லுநர்கள், அறிஞர்கள் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர். வட மொழி, கிரேக்கம், லத்தின், எகிப்து மொழி போன்றவற்றை விட மிக தொன்மையான மொழி தமிழ் மொழி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இதற்காத்தான் இயற்றினார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மலையாளம், கன்னடம் ஆகியவை தமிழில் இருந்து உதித்தது என பாடி இருக்கின்றார். திமுக கூட்டங்களில் இந்த கருத்துதான் பாடலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், 'வடமொழியை விட மூத்த மொழி, தமிழ் மொழி. கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது'. என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், முருகன் மாநாட்டில்
மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்ல திருப்பம் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையோடு பேசுகின்றார் அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதிமுக சார்ரபில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் இன்னும் பதிந்து இருக்கின்றது. திமுக மாநிலங்களவை பொறுப்பை கொடுத்தார்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றோம் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மதிமுக திமுகவிற்கு துணை நிற்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் தவெக பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.
English Summary
Vaiko warns that there is nothing wrong with Kamals speech it would be better for them to stop with this