வாக்குப்பதிவு தொடங்கியதும் நிறுத்தம்.! வேட்பாளர் பெயரில் தவறு செய்த தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. மொத்தம் 7,921 வாக்குச்சாவடிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்த முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

வாக்குப்பதிவு மாலை 6 மணி உடன் முடிவடைகிறது. அணைத்து வாக்கு சாவடிகளிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளாவூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் லட்சுமி என்பவரின் பெயர் தனலட்சுமி என அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்க்கு லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டதால், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் தனலட்சுமி என்பதை மையால் அழித்து திருத்தம் செய்து சமாதானம் செய்ய மேற்கொண்டனர். ஆனால் வேட்பாளர் லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் நிறுத்தப்பட்டதால், வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ullalur local body election stopped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->