கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திருப்பம்! தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் - 12-ம் தேதி விசாரணை - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை பொதுக்கூட்டம், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பெரும் சோகமாக மாறியது. இந்த கோர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவ இடமான வேலுசாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்த சிபிஐ குழு, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் தொடர் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை சேகரித்துள்ளது.

இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக, தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, மூன்று நாட்கள் தொடர்ந்து தவெக நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த சம்மன், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twist Karur crowd crush case CBI summons TTV leader Vijay investigation 12th


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->