நீட் ரத்து ரகசியம்! அந்த அயோக்கியன் யார்? அயோக்கியன் ராஜிவ்காந்தி இதற்கு பதில் சொல்! தவெக  லயோலா மணி பதிலடி! - Seithipunal
Seithipunal


திமுக மாணவரணி செயலாளர் ராஜிவ்காந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய்.
 
நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். 

ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். 

ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே. 

உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை. உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்" என்று விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி லயோலா மணி இதற்க்கு கடும் விமர்சனத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்ற உங்களை போன்ற அயோக்கியர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்த,தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் பல மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் நிலையும் நடந்து வருகிறது.

இதுவரை உங்கள் மக்கள் விரோத திமுக ஆட்சியில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள். இந்த இறப்பிற்கு எந்த அயோக்கியர் காரணம்?

மாணவர்கள் இனி யாரும் தற்கொலை செய்யக் கூடாது மாணவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே வெற்றித் தலைவரின் இன்றைய அறிவுரை.
நீட் தேர்வு வருவதற்கு காரணமான திமுக எங்களை விமர்சிக்க துளியளவும் அருகதை கிடையாது.

நீட் தேர்வை கடுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

பொய் சொல்லி மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றும் நீங்கள்தான் அயோக்கியர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் மிஸ்டர் ராஜீவ் காந்தி. கொத்தடிமை வேலையை மட்டும் பாருங்கள்.

"வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதை முடிவாக எண்ணி வருத்தப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம், முன்னேற நிறைய வழிகள் உள்ளது அதை சிந்தியுங்கள்" - இதுவே வெற்றித் தலைவர் தளபதி அவர்கள் இன்று நீட் குறித்து பேசிய கருத்து சுருக்கம்.

புரியாத மாதிரி நடிக்கும் அயோக்கியன் ராஜிவ்காந்தி புரிந்து கொள். பல கோடி மக்கள் கொண்டாடக் கூடிய எங்கள் வெற்றித் தலைவர் தளபதியை ஒருமையில் பதிவு செய்துள்ள அயோக்கியன் ராஜிவ்காந்தி இதற்கு பதில் சொல். இந்த மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் எந்த அயோக்கியன் என்று சொல்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Mani condemn to DMK Rajivgandhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->