தங்கப்பதக்கம் வென்று, தந்தையை இழந்த வீராங்கனை - டிடிவி தினகரன் உருக்கமான பதிவு! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன்.

இத்தகைய வெற்றியை லோகப்பிரியா பெற்ற நேரத்தில் அவரது தந்தையை இழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த இழப்பிலிருந்து மீண்டுவருவதற்கான மனவலிமையை அவரும், அவரது குடும்பத்தினரும் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இந்த இழப்பினால் மனம் சோர்ந்துவிடாமல் தான் சார்ந்திருக்கும் விளையாட்டில் மேலும் பல சாதனைகளை லோகப்பிரியா படைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஒரு மாவட்ட செய்தி :  அரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே கழிவுநீர் கால்வாய் கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் இது நடந்துள்ளதாகவும், சாலை விரிவாக்கம், கால்வாய் திட்ட பணிகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகள், அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகோள் விடுத்துள்ள மக்கள், கால்வாய்க்கு நடுவே மின் கம்பம் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் என்று அச்சம் கொண்டுள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Wish Lokapriya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->