திமுக கவுன்சிலரின் வெற்றிக்கு சிக்கல்., நீதிமன்றம் சென்ற அதிமுக வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகராட்சியின் திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, அதிமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் 11வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜ். இவரின் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி, அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்து உள்ளார்..

அதிமுக வேட்பாளர் கொடுத்துள்ள புகார் மனுவில், திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ஜெயராஜ் மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரின் தேர்தல் வெற்றி செல்லாது என்று உத்தரவிடவேண்டும் என்று அதிமுக வேட்பாளர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் அளித்துள்ள இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வருகின்ற ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichy 11 ward dmk counselor victory issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->