தமிழகத்தில் அடுத்து எம்ஜிஆர் ஆட்சி-சசிகலா அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அஇஅதிமுக கட்சி நிறுவனரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி ராமச்சந்திரன் அவர்களின் 105வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் வி.கே.சசிகலா அவர்கள், எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா தமிழக மக்களின் பேராதாரவோடும், தொண்டர்களின் ஆதரவோடும் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN next in MGR govt-sasikala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->