மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!
thiruvannamalai election postponement
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற வேண்டி உள்ளாட்சித் தேர்தல், பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருக்கவே, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் கடந்த மூன்றாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நடந்த 27 மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு ஒன்றிய தலைவர், ஒன்றிய துணை தலைவர், மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், திருவண்ணாமலை தண்ராம்பட்டு ஒன்றிய தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
thiruvannamalai election postponement