திமுகவினர் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்ட மேடையின் மீது ஏறிய திமுக குண்டர்கள், நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

20 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய தமிழர்களின் விடுதலைக்காக, தர்மபுரியில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில், திமுகவை சேர்ந்த குண்டர்கள் அத்துமீறி மேடை மீது ஏறி, பேச்சாளரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும், நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு கருத்தை கருத்தால் மோத திராணியற்ற திமுகவினர், இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கருத்திற்கு கருத்துதான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது. நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுக அரசு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirumavalavan against dmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->