கவன ஈர்ப்பு தீர்மானங்கள் தொடர்பில், புது உத்தரவு போட்ட சபாநாயகர்..! - Seithipunal
Seithipunal


''சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன்பே, கவன ஈர்ப்பு தீர்மானங்களை எம்.எல்.ஏ.,க்கள் வெளியிடக் கூடாது என்றும், ஊடகங்களும் அதை பிரசுரிக்கக் கூடாது,'' என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நேற்று சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில்; என்னிடமோ, சட்டசபை செயலரிடமோ, எம்.எல்.ஏ.,க்கள் எழுதிக் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட அலுவல்களை, உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்; ஊடகங்களுக்கும் கொடுக்கின்றனர்.

சட்டசபை விதிப்படி இப்படி வெளியிடக் கூடாது. எனவே, இனி எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானங்களை, சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன், சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது. ஊடகங்களும் அவற்றை பிரசுரிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Speaker has issued new orders regarding attention grabbing resolutions


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->