இந்தியாவில் உதயமாகிறது புதிய தேசிய கட்சி! விரைவில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், விரைவில் தேசிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து சந்திரசேகர் ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,

"தேசிய செயல்திட்டங்களுடன் கூடிய தேசிய கட்சியை தொடங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறை சார் நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தெலங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதை போன்றே, தற்போதும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் தேசிய கட்சி தொடங்கப்பட்டு அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தனது புதிய கட்சியை போட்டியிடவைக்க சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கேற்ப தற்போதே நிர்வாகிகளை கண்டறிய கட்சியின் மூத்த தலைவர்களை கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Chief Minister K Chandrasekhar Rao new national Party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->