டாஸ்மாக் ஊழல்: "சம்திங் ராங் இன் டாஸ்மார்க்" சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மதுரை டாஸ்மாக் ஊழலில் சிக்கியதை ஒளியிலிட்டு பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூன்று ஊழியர்கள் மாயக்கண்ணன், முருகன் மற்றும் ராமசாமி ஆகியோர் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: “மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலிருந்தும் ரூ.5,000 வரை வசூலித்து வந்தனர்.

இதைத் தடுக்க, ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்ததாலே அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.” என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில், நீதிபதி தெரிவித்தது: “ராஜேஸ்வரி மற்றும் செல்வம் மீது ஆடியோ ஆதாரங்களுடன் கூடிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது டாஸ்மாக் விதிகளை மீறியதாக இருந்தாலும், அதிகாரிகள் மீதான நடவடிக்கையின்றி ஊழியர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுவது தவறு.” என்றார்.

மேலும், “மதுபான விற்பனையை அரசு ஏற்க காரணம், சட்டவிரோத கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதே. ஆனால் அந்த அமைப்பிலே ஊழல் வேரூன்றுகிறது என ஆதாரங்கள் காட்டுகின்றன. "சம்திங் ராங் இன் டாஸ்மார்க்" டாஸ்மாக் துறை introspection (தன்னிலை சிந்தனை) செய்ய வேண்டும்,” என நீதிபதி கண்டித்தார்.

இத்துடன், மூவருக்கும் விதிக்கப்பட்ட சஸ்பென்ஷன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC scam High Court Madurai Bench 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->