சென்னை: தயாரிப்பாளர் வீட்டில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை! - Seithipunal
Seithipunal


பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடித் நடவடிக்கை திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் ‘நானும் ரவுடிதான்’, ‘அமரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராகக் பணியாற்றிய ஆகாஷ் பாஸ்கரன், தற்போது *டான் பிக்சர்ஸ்* நிறுவனம் வழியாக தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். தனுஷ் இயக்கி நடிக்கும் *‘இட்லி கடை’* திரைப்படம் அவரது தயாரிப்பில் வெளிவரவிருக்கிறது.

மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா நடிக்கும் *‘பராசக்தி’* படத்தையும் தயாரிக்கிறார். அதர்வா நடிப்பில் *‘இதயம் முரளி’* எனும் படத்தை அவர் தானே இயக்கி தயாரிக்கின்றார்.

சமீபத்தில் சிம்பு நடிக்கும் 49-வது படத்தின் பூஜையும் அவரது தயாரிப்பில் நடைபெற்றது. முன்னணி நடிகர்களுடன் பல புதிய தயாரிப்புகளும் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

முக்கியமாக, ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழாவில் தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC Scam ED Raid in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->