டாஸ்மாக் - ED வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! அதிர்ச்சியில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம்!
Tasmac ED Chennai High Court judgement now
டாஸ்மாக் சோதனை விவகாரத்தில், மேற்கொண்ட விசாரணை சட்டவிரோதமானது என அறிவிக்கவும், அதிகாரிகளை "விசாரணை" என்ற பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.
மேலும், 2007 முதல் 2021 வரையிலான முறைகேடுகள் குறித்த விசாரணை ஏன் இப்போது மட்டும் நடத்தப்படுகிறது என கேள்வியெழுத்து, அரசு தனியாக வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் கே. ராஜசேகர் கொண்ட அமர்வு விசாரித்தது. அமலாக்கத் துறை சார்பில் மேல்நிலைக் காவல் வழக்கறிஞர் ஆஜராகி, டாஸ்மாக் அதிகாரிகள் மீது பதியப்பட்ட 41 குற்றப்பதிவுகள் மற்றும் அவர்களின் விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது மட்டும் டாஸ்மாக் குறிவைக்கப்படுவது ஏன்? நாளை வேறு எந்த அரசுத் துறைகள் இலக்காக மாறும்? என அரசு தரப்பில் கடுமையான எதிர்வினைகள் பதிவானது.
வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், டாஸ்மாக் மற்றும் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், அமலாக்கத் துறையின் தொடரும் நடவடிக்கைகளுக்கு வழிவகை உருவாகியுள்ளது.
English Summary
Tasmac ED Chennai High Court judgement now