டாஸ்மாக் முறைகேடு: ஆகாஷ் பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு? அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
TASMAC ED Case Akash Chennai HC
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர் விக்ரமின் வீடுகள், அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுவை நீதிபதிகள் ரமேஷ், லட்சுமி நாராயணன் விசாரித்தனர். அமலாக்கத் துறை தரப்பில், இருவருக்கும் தொடர்பு உள்ளதற்கான காரணத்தை மூடிய கவரில் தாக்கல் செய்தனர். ஆனால் நீதிபதிகள் அதில் உள்ள தகவல்கள் போதாது எனக் குறிப்பிட்டு, முழுமையான ஆவணங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்ப, “சீல் இல்லை; நோட்டீஸ் மட்டுமே ஒட்டப்பட்டது” என அமலாக்கத் துறை தெரிவித்தது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அதிகாரமின்றி நோட்டீஸ் ஒட்டுவது சட்டவிரோதம் என்றும், அதை சட்டப்பூர்வமானதாக்க முடியாது என்றும் வலியுறுத்தினர்.
English Summary
TASMAC ED Case Akash Chennai HC