முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி பிறந்தநாள் இனி அரசு விழா: தமிழக அரசு அரசாணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட இயக்கத் தூண் மற்றும் முன்னாள் அமைச்சரான ஏ. கோவிந்தசாமி (AG) அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 15) இனி அரசு விழாவாகக் கொண்டாடத் தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி:
1952-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் விக்கிரவாண்டி தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ. கோவிந்தசாமி, திராவிட இயக்கத்தின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். இவரது புகழைப் போற்றும் வகையில், விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்தில் ₹4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நினைவு அரங்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி திறந்து வைத்தார்.

அரசாணையின் முக்கிய அம்சங்கள்:
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் அ.சிவா விடுத்த கோரிக்கையை ஏற்று, செய்தி - மக்கள் தொடர்புத் துறை இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது:

அரசு மரியாதை: ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி ஏ. கோவிந்தசாமியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

நிதி ஒதுக்கீடு: இந்த விழாவிற்கான தொடர் செலவினமாக 2026-27 நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் ₹25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu Government order former minister AGovindasamy birthday state event


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->