தமிழ்நாடு சட்டசபை சலசலப்பு: ஆளுநர் வெளியேற, சபாநாயகர் உரையை தமிழில் வாசித்து கவனம் ஈர்த்தார்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் துவங்கியது. சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து அளித்து மரியாதை தெரிவித்து, கலைஞர் மு.கருணாநிதியின் வரலாற்றுப் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

இந்த சட்டசபை நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன் ஆரம்பமானபோதும், வழக்கம்போல், ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சபையில் சில நிமிடங்கள் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த புறக்கணிப்பு, சபை வளாகத்தில் பரபரப்பை கிளப்பியது.மேலும், நிறுவன நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, “என்னை அவமதித்தீர்கள்” என்று குற்றச்சாட்டிய ஆளுநர் உரையை வாசிக்க மறுத்தார்.

இதற்கு பதிலாக, சபாநாயகர் அப்பாவு, “அமைச்சரவை எழுதி வழங்கிய உரையை வாசிப்பது சட்டசபை மரபு; நடைமுறைகளை மீறக்கூடாது” என உத்தரவிட்டார்.அதன் பிறகு, ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவே தமிழில் முழுமையாக வாசித்து, சட்டசபை நிகழ்ச்சி முழுமையாக நடைப்பெற்றது.

மேலும், அரசு இதுவரை செயல்படுத்திய முக்கிய திட்டங்கள், வளர்ச்சி முயற்சிகள், பொதுமக்கள் நலனில் எடுத்த சாதனைகள் அனைத்தும் சபாநாயகர் உரையில் விரிவாக பட்டியலிடப்பட்டன.

இதனால், ஆளுநர் புறக்கணித்த நிலையில் இருந்த போதிலும், அரசின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டன.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்களுக்குப் புதிய தீப்பொறியாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Assembly commotion Governor walked out Speaker drew attention by reading speech Tamil


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->