மேகேதாட்டு அணை திட்டம்; தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


மேகே​தாட்டு அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. அந்த உத்​தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக புதிய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிப​தி​கள் கே.வினோத் சந்​திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வு விசாரித்தது. அப்போது, 'மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்' என கூறி நிராகரித்துள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

அதாவது, கர்​நாட​கா​வில் காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்டு அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை தமிழக அரசு எதிர்த்து, தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் அய்​யாக்​கண்ணு உள்​ளிட்​டோர் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

அதன்படி, கடந்த 2025 நவம்பர் 13-ஆம் தேதி அப்​போதைய தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்​.க​வாய் அமர்​வில் இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது, 'கா​விரி​யின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்​டும் கர்​நாடக அரசின் முயற்​சி, காவிரி தீர்ப்பாயத்​தின் உத்​தரவை மீறும் செயலாகும். இத்​திட்​டம் செயல்​பாட்​டுக்கு வந்​தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்' என்று தமிழக அரசு சார்​பில் வாதிடப்பட்டது.

மேலும், மேகே​தாட்டு அணை திட்​டத்தால் தமிழகம் எந்த வகையிலும் பாதிக்​கப்​ப​டாது என்றும், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்​ணீரை வழங்க இத்​திட்​டம் தடை​யாக இருக்​காது என்று கர்​நாடக அரசு தரப்​பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிப​தி​கள், கர்​நாடக அரசின் திட்ட வரைவு அறிக்​கை, காவிரி ஆணை​யம் மற்​றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு​வின் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ளதாகவும், அந்த அமைப்​பு​கள் ஒப்​புதல் அளித்​தால் மட்​டுமே வரைவு அறிக்கை ஏற்​கப்​படும் என்று மத்​திய நீர் ஆணை​யம் தெளிவுபடுத்தியது. அது தவிர, காவிரி வழக்​கின் தீர்ப்பின்படி தண்​ணீரை திறக்க மறுத்​தால் கர்​நாடக அரசு நீதி​மன்ற அவம​திப்​புக்கு உள்​ளாகும் என்று குறிப்பிட்டனர்.

அத்துடன், மேகே​தாட்டு அணைக்​கான விரி​வான திட்ட அறிக்கைக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டால் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம் என்று கூறினர். தற்​போதைய சூழ்​நிலை​யில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்​பட்டு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தால், விசாரணைக்கு ஏற்க முடி​யாது என்று தெரிவித்து குறித்த மனுவை நிராகரித்​தனர்.

இந்நிலையில், இதே மேற்கூறிய காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த தமிழகத்தின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court Rejects Tamil Nadu Governments Review Petition Regarding Mekedatu Dam Project


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->