BigBreaking | எடப்பாடி பழனிச்சாமியின் சிபிஐ வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்.! நீதிபதி சொன்ன காரணம்.! - Seithipunal
Seithipunal


நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி, சுமார் 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக,  ஆர் எஸ் பார்வதி பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பின்னர், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். பல வருடங்களாக இந்த மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்படாமல் இருந்த நிலையில், இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court order EPS CBI case cancel


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->