சமூகநீதியே நான்தான்டா..சீமான் பரபரப்பு பிரச்சாரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஒரு ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த மக்களவை தேர்தலில் தனித்து களமாடுகிறது நாம் தமிழர் கட்சி. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அதில் தர்மபுரி வேட்பாளர் அபிநயா ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் வாங்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், எங்கள்  வளம்  எங்கள் கண் முன்னே கொள்ளை அடிக்கப்படுகிறது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளை நொறுக்கி மண்ணாகவும் கற்களாகவும் வெளி மாநிலத்துக்கு ஏற்றி செல்கிறார்கள் இது எப்படியே  நீடித்தால் தர்மபுரி பாலைவனமாக மாறிவிடும்.

தொடர்ந்து பேசிய சீமான்  நாங்கள் நீண்ட காலமாக தனித்து போட்டியிடுகிறோம்.  ஆணுக்கு பெண் சமமானவர்கள். அதனால் தான் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் சமமாக சீட்டு பிரித்து வழங்கி உள்ளேன். சமூகநீதியை பாதுகாக்க  போராடிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் என்று பேசினார் சீமான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

social justice Seeman dharmapuri speech


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->