பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்? பாஜகவுக்கு புதிய சிக்கல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைவது உறுதி என  சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்ட்ராவில் எந்த கட்சிக்கும் பெருபான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், கூட்டணி ஆட்சி தொடர்பாக உத்தவ் தாக்கரே முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். விரைவில் மகாராஷ்ட்ராவில் புதிய அரசு பதவியேற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக தலைமைலான மத்திய அரசில் பதவி வகித்து வரும் சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலகினால், காங்கிரசுடன் இணைந்து சிவசேனாவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனா பாஜக தலைமைலான மத்திய அரசில் வகித்து வரும் அமைச்சர் பதிவிலிருந்து விலகினால், அடுத்த ஆண்டுகளுக்கு சிவசேனா முதலமைச்சர் பதவி வகித்து கொள்ளலாம் என தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena mp may be resign his post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->