சசிகலா போட்ட அதிரடி திட்டம்.. தினகரனுக்கு ட்விஸ்ட்.. அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

தற்போது சசிகலா சிறை சென்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை 4 ஆண்டுகள் அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. அப்படி வெளியே வராத பட்சத்தில், 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியோட அவரது நான்காண்டு கால சிறை தண்டனை முடிவுக்கு வருகிறது. 

மேலும் வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சசிகலா தீவிரமாக அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் தினகரன் நம்பாமல், எடப்பாடியை தன்பக்கம் இழுக்க சசிகலா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடியை தன்பக்கம் இழுக்க தனது விசுவாசிகளாக களத்தில் இறங்கி விட்டாராம் சசிகலா. அப்படியே எடப்பாடி தன்பக்கம் வராவிட்டால், அதிமுகவில் தேர்தலில் சீட் கிடைக்காமல் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் தன் பக்கம் இழுக்க சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். சசிகலாவின் இந்த திட்டத்தால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala plan for election admk is shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->