வேதனையில் மூழ்கிய சசிகலா., வெளியான அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"வடசென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி, 107 வது வட்டக் கழக முன்னாள் அவைத்தலைவர், திரு. R. கோதண்டன் (வயது 84) அவர்கள் தனது வீட்டில் இருக்கும்போது தவறி கீழே விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று மதியம் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 

கழகத்தின் மீதும், நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். 

எழும்பூர் பகுதியில் முப்பத்தைந்து ஆண்டு காலமாக தொடர்ந்து அவைத்தலைவராக செவ்வனே கழக பணியாற்றியவர். புரட்சித்தலைவரின் மறைவுக்கு பிறகு, சோதனையான காலகட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்களில் திரு.கோதண்டன் அவர்களும் ஒருவர் ஆவார். 

பெரியவர் திரு.கோதண்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று சசிகலா தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala mourning to gothandam dead


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->