மீண்டும் அழைப்பு விடுத்த சசிகலா.. அதிமுகவில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து 8 மாதங்களாக பொறுமையாக காத்திருந்து கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு எம்ஜிஆர் இல்லம் சென்ற அதிமுக கொடியை ஏற்றி, பொதுச் செயலாளரான தனது பெயரை கல்வெட்டாகப் பொறித்தார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளான வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மெரினாவில் உள்ள அம்மா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம்‌ புரட்டித்தலைவி அம்மா அவர்கள்‌, தமிழக மக்களின்‌ உரிமைக்காகவும்‌, ஏழை எளிய மக்களின்‌ துயர்‌ துடைக்கவும்‌ தம்‌ வாழ்நாளெல்லாம்‌  பாடுபட்டவர்‌. உயிர் தொண்டர்களின்‌ நலனில்‌ அக்கறைக்‌ கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான், மக்களுக்காக நான்" என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற மக்கள் தலைவி. நாம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 நாம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடைபிடித்த அதே கொள்கையோடு, அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க அவரது நினைவு நாளான 5.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் கழக தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார். 

இந்த புனித விழாவில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவரின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், தமிழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கப்பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும், சாதி மத பேதமின்றி கட்சி பாகுபாடு இல்லாமல் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள ஒரே அணியில் நின்று ஒற்றுமையாக இணைந்து அனைவரும் முக கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala announcement for jayalalithaa memorial


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->