'கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சனைகள் எதுவும் இல்லை'; சென்னை மாநகராட்சி ஆணையர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 08 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  

இதையடுத்து, திமுக மு.க.ஸ்டாலின் தேர்தலில் தேர்தலில் சங்கேதமிருப்பதாக புகார் அளித்தது. அதன் அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை சரிபார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் கடந்த புதன் கிழமை (29-ஆம் தேதி ) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் தற்போது வரை எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மின்னணு வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்னும் 05 நாட்களுக்கு நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sameeran says there are no problems with Kolathur constituency voting machines


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->