#BigBreaking || சேலம் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே நீதிபதிக்கு கத்தி குத்து.! சற்றுமுன் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal



சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற, அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி பொன் பாண்டியன் வழக்கம்போல் இன்று காலை தனது பணிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், அவரை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

சுதாரித்துக்கொண்ட நீதிபதி பொன் பாண்டியன், பிரகாஷ் தள்ளி விட்டுவிட்டு தப்பித்தார். எதிர்பாராத விதமாக நீதிபதி பொன் பாண்டியன் மீது கத்திக் குத்துச் சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து நீதிபதி பொன் பாண்டியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்தே நீதிபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salem Justice attacked


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->