#BigBreaking || சேலம் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே நீதிபதிக்கு கத்தி குத்து.! சற்றுமுன் பரபரப்பு சம்பவம்.!
salem Justice attacked
சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற, அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி பொன் பாண்டியன் வழக்கம்போல் இன்று காலை தனது பணிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர், அவரை கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
சுதாரித்துக்கொண்ட நீதிபதி பொன் பாண்டியன், பிரகாஷ் தள்ளி விட்டுவிட்டு தப்பித்தார். எதிர்பாராத விதமாக நீதிபதி பொன் பாண்டியன் மீது கத்திக் குத்துச் சம்பவத்தில் சிறிய காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பொன் பாண்டியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதே சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் வைத்தே நீதிபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.