திமுகவில் உழைக்காதவர்களுக்கே பதவி..!! அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வேதனை..!!
RS Bharti said DMK has given posts to people without working
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி திமுகவில் காலம் காலமாக இருக்கும் பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்று வேதனை இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் "கட்சிக்காக உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் இருப்பது நியாயம்தான்.
இதற்கு காரணம் உழைத்தவர்களுக்கு பதவி இல்லலாமல், உழைக்காதவர்கள் கட்சிக்கு வந்ததும் பதவி தந்திருப்பது வேதனையாக தான் இருக்கும். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திமுகவுக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். திமுகவிற்கு விசுவாசமாக இருந்தால் பதவி நிச்சயமாக தேடி வரும்.
நான் கட்சிக்கு அழைத்து வந்தவர்களில் பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். ஆனால் நான் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவன் என இருந்ததால் 63 வயதில் காலதாமதமாக எம்பி பதவி எனக்கு கிடைத்தது. திமுகவுக்காக விசுவாசமாக இருந்தாலும் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது.
எனினும் திமுகவில் பொறுமையாக இருந்தால்தான் என்றைக்காவது பதவி தேடி வரும். அதுவரை கட்சியில் உள்ள இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டும்" என ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
RS Bharti said DMK has given posts to people without working