ஆறுக்குட்டி போல பல குட்டிகள் திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் - திமுக எம்.பி.ஆர்.எஸ். பாரதி.! - Seithipunal
Seithipunal


திமுக தொடர்ந்து வெற்றிபெற்று வருவதை தாங்க முடியாமல் பழனிசாமி பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். இதைப்பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி எதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் என எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharathi speech about ADMK and EPS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->